கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் பெங்களுருவில் பாஜக அலுவலகம் அருகே இன்று குண்டுவெடித்தது. நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வரும் 22ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைய கால அவகாசம் கோரிய நடிகர் சஞ்சய் தத்தின் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறை சீர்திருத்தம் போன்றவை குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் மாநில முதலமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது.